Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலையிலேயே வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

காலையிலேயே வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (08:23 IST)
தமிழ்நாட்டில் இன்று பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட்டை தமிழக மாவட்டங்கள் சிலவற்றிற்கு அறிவித்துள்ளது. இன்று கனமழை தொடர்வதால் பல மாவட்டங்கள், சில ஊர்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக ஆட்சியர் காயத்ரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமலை பகுதியிலும் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!