Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:50 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது சென்னையில் மழை குறைந்து தென் தமிழக மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று 2 மணி நேரத்திற்கு கன்னியாக்குமரி, தென்காசி, மதுரை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments