Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்! – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:38 IST)
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிட அமைச்சர் அன்பில் மகேஷ் “போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14417 என்ற உதவி எண் உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் அதில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்