Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்

Webdunia
புதன், 30 மே 2018 (07:22 IST)
இதுவரை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் முதல்முறையாக 11ஆம் வகுப்பு என்று கூறப்படும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாகவும், இந்த தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறையின் இணைய தளங்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம்  மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்வியாண்டில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரம் மாணவ - மாணவிகள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதியுள்ளனர் என்பதும் அவர்கள் அனைவரும் இன்று தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று வெளிவரும் தேர்வு முடிவில் மாணவர்கள் பாஸ் ஆகவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புகளுக்கு செல்லலாம் என்பதும், தேர்ச்சி பெறாத பாடங்களில் பிளஸ் 2 தேர்வின் இடையில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments