இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்

Webdunia
புதன், 30 மே 2018 (07:22 IST)
இதுவரை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் முதல்முறையாக 11ஆம் வகுப்பு என்று கூறப்படும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாகவும், இந்த தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறையின் இணைய தளங்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம்  மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்வியாண்டில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரம் மாணவ - மாணவிகள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதியுள்ளனர் என்பதும் அவர்கள் அனைவரும் இன்று தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று வெளிவரும் தேர்வு முடிவில் மாணவர்கள் பாஸ் ஆகவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புகளுக்கு செல்லலாம் என்பதும், தேர்ச்சி பெறாத பாடங்களில் பிளஸ் 2 தேர்வின் இடையில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...

வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அரை கிலோமீட்டர் டாக்சியில் செல்ல ரூ.18000.. சிறையில் கம்பி எண்ணும் டாக்சி டிரைவர்..!

குரங்கு என நக்கலடித்த கணவர்!.. தூக்கில் தொங்கிய மாடல் அழகி!...

அடுத்த கட்டுரையில்
Show comments