268 நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. விரைவில் உயரும் வாய்ப்பு?

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:37 IST)
கடந்த 267 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 268 வது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணையை கொள்முதல் செய்து வைத்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments