Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றை போல் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ரூ.100ஐ தொடுமா?

Webdunia
புதன், 5 மே 2021 (07:05 IST)
ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியானதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் கணித்து இருந்தனர்.
 
அதேபோல் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த  நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.
 
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 92.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 19 காசுகள் உயர்ந்து 86.09 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐயும், டீசல் விலை ரூபாய் 90ஐயும் தொட்டு விடும் அபாயம் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவிப்பு கூட வெளியிடாமல் திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

டெல்லி ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: தமிழக அரசியலில் பரபரப்பு

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு: முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.. ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments