Publish Date: Mon, 31 Oct 2022 (08:13 IST)
Updated Date: Mon, 31 Oct 2022 (08:14 IST)
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றாலும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
மேலும் இந்தியாவில் வரும் டிசம்பருக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்