Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (18:43 IST)
சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ: நாங்கள் தென்கொரியாவை தாக்கவில்லை: வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்னின் தங்கை பேட்டி..!
 
மேலும் நாளை தமிழகத்தில் அனேக இடங்களிலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்யும் என்று 9ஆம் தேதி தென் தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Ediited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments