Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:51 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது என்பதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments