Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (07:32 IST)
தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 20,000 சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னையில் 28 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 3-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் நாளை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments