Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இறைச்சி கடைகள் இயங்காது.. 2 நாட்களுக்கு மதுக் கடைகளுக்கும் லீவு.. அதிரடி அறிவிப்பு..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:29 IST)
இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் இறைச்சி கடைகள் இயங்காது என்றும் அதேபோல் டாஸ்மாக் மது கடைகளுக்கு இரண்டு நாள் லீவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று  ஜனவரி 25ஆம் தேதி தமிழக முழுவதும் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மற்றும் நாளை மறுநாள்  குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையின் விதிகளின்படி ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று. எனவே இந்த இரண்டு நாட்களும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை உள்பட தமிழக முழுவதும் இன்று இறைச்சி கடைகள், நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

கண்டிப்பாக கிளப்புகளில் உள்ள பார்கள் கண்டிப்பாக மூடப்படும் என்றும் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments