Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு

ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (08:48 IST)
சென்னை தரமணியில் கடந்த 1ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 

 
இதனையடுத்து, ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐஸ்வர்யா ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை மூன்று முறை ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறந்த அளவே மது அருந்தியதாக ஐஸ்வர்யா தரப்பிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே மருந்து அருந்தியதற்கான ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதாடினர்.
 
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மை டியர் யங் மேன்: ஜெயலலிதாவுக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் ஆங்கிலத்தில் விவாதம்! (வீடியோ)