Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: கிராம் ரூ.5100ஐ தாண்டியதால் அதிர்ச்சி!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: கிராம் ரூ.5100ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
, புதன், 9 மார்ச் 2022 (09:46 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5105.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 392 அதிகரித்து ரூபாய் 40840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5504.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44032.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 160 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 4 ஆயிரத்தில் தினசரி பாதிப்புகள்! – கொரோனாவிலிருந்து மீளும் இந்தியா!