Publish Date: Tue, 13 Dec 2022 (07:55 IST)
Updated Date: Tue, 13 Dec 2022 (07:57 IST)
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என நேற்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.