Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம்: கடைசி தேதி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (06:50 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பின்படி ஜூன் 9ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பர்கள் 12 30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 
இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 
 
6244 பணியிடங்கள் இருப்பதால் இந்த தேர்வு எழுத விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments