டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (12:03 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கணினி வழியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கணினி வழி தேர்வு நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஓஎம்ஆர் முறையில் தான் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கணினி வழியில் நடத்தப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான தேர்வில் சில தொழில் பக்க கோளாறுகள் ஏற்பட்டதாகவும் இதனால் சில தேர்வர்கள் தேர்வினை முழுமையாக எழுத முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதை அடுத்து தேர்வர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கணினி வழி தேர்வு முறையை ரத்து செய்து விட்டது. இந்நிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும்,  ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும்   தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments