Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (11:52 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு சிலர் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.

பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக விசாரணை செய்ய உள்ளது. மேலும், இந்த விசாரணையில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்