Publish Date: Thu, 06 Feb 2020 (13:52 IST)
Updated Date: Thu, 06 Feb 2020 (13:56 IST)
டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேட்டில் சிபிசிஐடியால் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார், சென்னை சைதாப்பேடை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைக்கேடு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த ஜெயக்குமாரை பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவலில் வைக்கவுள்ளனர்.