Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலைய தேவையில்ல.. மின் அளவீட்டின்போதே கட்டணம் செலுத்தலாம்! – மின்சார வாரியம் திட்டம்!

Tamilnadu
Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (09:42 IST)
தமிழக முழுவதும் மின் கட்டண அளவீட்டின்போதே கட்டணத்தை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மின் பயனாளர்களின் மாதாந்திர மின் கட்டணம் அளவிடப்பட்ட பின் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் அருகிலுள்ள கணினி மையங்கள் மூலமாக ஆன்லைனில் பணம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி மின் கட்டண அளவீட்டை குறிக்க வரும் ஊழியர் மின் கட்டணத்தை குறித்ததும் அவரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை உடனடியாக செலுத்தலாம்.

முதலாவதாக இது சோதனை முயற்சியாக சென்னை மாநகராட்சியில் மட்டும் அமல்படுத்த உள்ளதாகவும், வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments