Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 5 நாட்கள்… வானிலை மையம் விதித்த கெடு!

அடுத்த 5 நாட்கள்… வானிலை மையம் விதித்த கெடு!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (13:58 IST)
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை ஆய்வு மயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் சென்னையை பொருத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்துக் கொண்டும்.. சிரித்துக் கொண்டும்..! – சசிக்கலா- வைத்திலிங்கம் சந்திப்பு ஏன்?