Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் அரசுக்கே திரும்பி வரும் கொடுமை

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (18:52 IST)
தமிழக அரசு பொங்கல் பரிசாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் ஒருசில பொங்கல் பொருட்களையும் வழங்கி வருகிறது. இதற்கு நீதிமன்றமும் கட்டுப்பாடு விதித்து வரும் நிலையில் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் திரும்பி அரசுக்கே வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

ரேசன் கடையில் ஆயிரம் ரூபாயை பெற்ற பலர் நேராக அந்த பணத்தை டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கு வாங்கி குடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ராஜபாளையத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் மனைவிக்கு தெரியாமல் ரேசன் அட்டையை எடுத்து ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் வாங்கி மொத்த பணத்தையும் ஒரே நாளில் சரக்கு வாங்கி குடித்துள்ளார். இதனையறிந்த அவரது மனைவி கணவனை தட்டி கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனை தற்போது காவல்நிலையம் வரை சென்று வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவொரு உதாரண நிகழ்வுதான். இதேபோன்ற நிகழ்வு தமிழகத்தில் பல நடநதுள்ளது.

பொதுமக்கள் இனிமையாக இன்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கொடுக்கும் பரிசுப்பணம் டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வருவதால் பொங்கல் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments