Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை நீக்கினால் ஆட்சி கலையும்: விஜயபாஸ்கர் எச்சரிக்கையா?

என்னை நீக்கினால் ஆட்சி கலையும்: விஜயபாஸ்கர் எச்சரிக்கையா?
, திங்கள், 17 ஏப்ரல் 2017 (05:25 IST)
தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கரையே சுற்றி சுற்றி வருகிறது. விஜயபாஸ்கர் துணை முதல்வர், விஜயபாஸ்கர் அமைச்சரவையில் இருந்து நீக்க வாய்ப்பு, விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு ஆகிய செய்திகள் காரணமாக அவர்தான் தற்போது தமிழக அரசியலின் ஹீரோவாக இருந்து வருகிறார்.



 


இந்த நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் தினகரனுக்கு எதிராக முதல்வர் உள்பட அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் காய் நகர்த்தி வருவதாகவும், எந்த நேரமும் விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்படும் வாய்ப்புக்ள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேள்விப்பட்ட விஜயபாஸ்கர் கொந்தளித்துவிட்டாராம். ‘என்னைப் பதவி விலகச் சொல்வதற்கு இவர்கள் யார்? இது என்னுடைய ஆட்சி. நான்தான் இந்த ஆட்சியைக் காப்பாற்றி வைத்துள்ளேன். கூவாத்தூரில்             எம்.எல்.ஏ-க்களை வைத்துக் காப்பாற்றியது நான்தான். எனக்கு ஏதாவது நடந்தால் என் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சும்மா இருக்க மாட்டார்கள். 16 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எனக்கே தெரியாது’ என்று மிரட்டி வருகிறாராம். தமிழகத்தில் மிக விரைவில் மீண்டும் ஒரு 'பிரேக்கிங் நியூஸ்' டிரெண்ட் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழை நாடு என்று கூறிய ஸ்னாப்சாட்-ஐ அடித்து விரட்டிய இந்தியர்கள்