Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்க! – தோப்புக்கரணம் போட வைத்த போலீஸ்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (12:17 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களை போலீஸார் தோப்புக்கரணம் போட வைத்தது வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வாரம் முதலாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசர தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் பலர் சாவகாசமாக வீதிகளில் சுற்றி வருவதும் தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு நூதன தண்டனையை போலீஸார் அளித்துள்ளனர். ஆரணி சாலைகளில் விதிமுறைகளை மீறி சுற்றிய நபர்களை பிடித்து தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை அளித்துள்ளனர். பின்னர் எச்சரித்து அவர்களை அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments