Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகநூலில் காதல்.. ஆபாச படத்தை வைத்து மிரட்டல்! – மோசடி வாலிபர் கைது!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:15 IST)
முகநூல் மூலமாக கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக பழகி அவர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்தி. சமையல் வேலை செய்து வரும் இவர் முகநூல் வாயிலாக சில பெண்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவர் புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடனும் பழகி வந்த நிலையில் அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர் அந்த பெண் குளிக்கும் வீடியோ காட்சிகளை அனுப்ப சொல்லி கேட்டு அதை தனது போனில் சேமித்துக் கொண்ட கார்த்தி அதை வைத்து பின்னர் அந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தன் தந்தையிடம் சொல்ல அவர் திருபுவனை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீஸார் செல்போன் சிக்னலை கொண்டு கார்த்தியை கைது செய்தனர். விசாரணையில் கார்த்தி பல பெண்களிடம் இவ்வாறாக தொடர்பில் இருந்ததும் ஆபாச வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments