Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் நன்கொடை: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:14 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு உடன் நன்கொடை அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அதிமுக திமுக மக்கள் நீதி மய்யம் உள்பட ஒருசில கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது விரைவில் இந்த கட்சிகள் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியும் விருப்ப மனு விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் விருப்ப மனுவுடன் இணைத்து நன்கொடை தொகையையும் செலுத்தலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் அறிவித்துள்ளார்
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதா என்பதை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனு குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments