திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:20 IST)
திமுக தலைமை ஏற்க மக்கள் ஏக்கத்துடன் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் அங்கு இவ்வாறு பேசினார். 
 
ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை விட அதிகமாக கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மட்டுமின்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். 
 
பொதுமக்கள் திமுக ஆட்சிக்கு வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என பேசியுள்ளார். அதன் பின்னர் முன்னாள் நகரமன்றத் தலைவர் மயில்வாகணன் தலைமையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்