Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்... ரெட் டி-ஷர்ட் போட்டு; பாட்டு பாடி அசத்தும் ஜெயகுமார்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (11:55 IST)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்று பாட்டு பாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் வீதியில் வந்த பூம் பூம் மாட்டை கண்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார். பின்னர் இது குறித்து பாட்டு பாடி கருத்து தெரிவித்தார். 
 
அவர் கூறியதாவது, பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. 
 
பூம் பூம் மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை நாம் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments