Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர்கிட்ட கேட்காம நீங்களே ஊசி போட்டுக்காதீங்க! – எச்சரிக்கும் சுகாதரத்துறை செயலாளர்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:22 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டாக்டர் அறிவுறுத்தல் இன்றி ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதாமை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணா நகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் மக்கள் மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி தாமாகவே ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்ட அவர், மக்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments