Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு பிறகுதான் ரொம்ப உஷாரா இருக்கணும்! – கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:28 IST)
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்த 28 நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்துள்ள நிலையில் சமீப வாரங்களில் தீபாவளி பண்டிகை காரணமாக பல இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் செய்தி அனுப்பியுள்ளார். அதில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தாலும், தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களில் மக்கள் அதிகமாக கூடியதாலும், தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அடுத்த 14 முதல் 28 நாட்கள் வரை மிகவும் முக்கியமான நாட்கள் என கூறியுள்ள அவர் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மற்றும் நோய் பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments