Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:51 IST)
நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் புயல் நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிய சோதனைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா நிவாரண முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments