Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:51 IST)
நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் புயல் நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிய சோதனைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா நிவாரண முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments