Publish Date: Wed, 05 Jan 2022 (11:27 IST)
Updated Date: Wed, 05 Jan 2022 (13:51 IST)
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை முறையாக மேற்கொள்வதுடன் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.