Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்காக துப்பாக்கிச்சூடு? அரசு பதிலளிக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:51 IST)
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலும் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 
 
இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அமுதநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9பேர் கொண்ட குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது குறித்து வருகிற 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments