Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ பேரு அப்ளை பண்ணுனா என்ன பண்றது? – சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:59 IST)
தமிழகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கான பணியிட தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தேர்வு நடைமுறைகளை நிறுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலாளர், சமையல் உதவியாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதை தொடர்ந்து மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரையில் விண்ணப்பங்களை சமர்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பதட்டம் நிலவியது.

தற்போது இந்த பணியிடங்களுக்கு பல்லாயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் பணியிட தேர்வுகளை நடத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments