Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ பேரு அப்ளை பண்ணுனா என்ன பண்றது? – சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:59 IST)
தமிழகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கான பணியிட தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தேர்வு நடைமுறைகளை நிறுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலாளர், சமையல் உதவியாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதை தொடர்ந்து மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரையில் விண்ணப்பங்களை சமர்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பதட்டம் நிலவியது.

தற்போது இந்த பணியிடங்களுக்கு பல்லாயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் பணியிட தேர்வுகளை நடத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments