Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி தடை ஏன்? தமிழக அரசின் முழு விளக்கம்

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (16:33 IST)
விநாயகர் சதுர்த்தி தடை ஏன்? தமிழக அரசின் முழு விளக்கம்
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடுத்து இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
22.8.2020 அன்று விநாயகர்‌ சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ காரணமாக, தேசிய பேரிடர்‌ மேலாண்மை சட்டத்தின்‌ கீழ்‌ மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம்‌ சார்ந்த விழாக்கள்‌, கூட்டு வழிபாடுகள்‌ ஆகியவை நாட்டின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படியும்‌, மாநிலத்தில்‌ கொரோனா தொற்றினால்‌ நிலவிவரும்‌ சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, கொரோனா நோய்‌ தொற்று பரவுதலை தடுக்கும்‌ வகையில்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகள்‌ அமைப்பதையும்‌, பொது இடங்களில்‌ வழிபாடு நடத்துவதையும்‌, ஊர்வலமாக எடுத்துச்‌ சென்று நீர்நிலைகளில்‌ கரைப்பதையும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, பொதுமக்கள்‌ அவரவர்‌ வீடுகளிலேயே விநாயகர்‌ சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும்‌ அரசின்‌ ஆணையை பொதுமக்கள்‌ பின்பற்ற வேண்டும்‌ என ஆணையிட்டுள்ளது.
 
எனவே, மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ ஆணைகளையும்‌, வழிகாட்டி நெறிமுறைகளையும்‌ பின்பற்றி, கொரோனா நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ பொருட்டு அரசு எடுத்துவரும்‌ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments