Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (16:27 IST)
கொரனோ பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது பொதுநலன் பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது 
 
ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இன்றைய விசாரணையின்போது விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்துசெய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது 
 
மேலும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments