பள்ளிக்கூடம் வந்தே ஆக கட்டாயம் இல்ல.. விருப்பமிருந்தா வரலாம்! – தமிழக அரசு பதில்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:28 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள் தயாராகி வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது குறித்து நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் பதில் அளித்துள்ள தமிழக அரசு, மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்தே தீர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் வகுப்புகள், குறிப்புகள் அனுப்புதல் போன்றவையும் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே பள்ளிகள் திறக்கப்படுகிறது என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments