Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி முதல் ஆரம்பம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (07:57 IST)
அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்த திட்டம் தற்போது நல்லமுறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் உள்ள இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments