Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தவில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு விளக்கம்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (17:42 IST)
கர்ப்பிணிகளின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முடக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது என்றும், அந்த நிதி கர்ப்பிணிகளுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? "எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதில் கூறிய தமிழக அரசின் சுகாதாரத்துறை, ‘தமிழகத்தில் மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளால் காலதாமதம் ஆகிறது என்றும், தமிழக அரசின் 'PICME 2.0' இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
மேலும் நிலுவையில் உள்ள மகளிருக்கு விரைவில் மகப்பேறு நிதி உதவி வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments