Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிடாஸில் சரக்கு வாங்க மாட்டோம் ; தமிழக அரசு அதிரடி முடிவு? ; சசிகலாவிற்கு அடுத்த ஆப்பு

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (10:27 IST)
சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில், மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய்க்கு முறைகேடான பணவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. 
 
அதைத் தொடர்ந்து மிடாஸ் நிறுவனத்தில் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது எந்த நிறுவனமும் அங்கு மதுபானங்களை கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் நிறுவனத்தின் மூலமே 25 சதவீதம் அளவுக்கு மதுபான வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதை நிறுத்திக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments