Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய வழக்கறிஞர்கள்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:00 IST)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய வழக்கறிஞரை நியமித்து சற்றுமுன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு சார்பில் ஆஜராக மேலும் 44 வழக்கறிஞர்களை நியமித்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள் ஆன்லைனில் தொடரும் என்றும் ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அவர்கள் அறிவித்துள்ளார். நீதிமன்றப் பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வருவார்கள் என்றும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments