Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயான பணியாளர்கள் இனி முன்களப் பணியாளர்கள்: தமிழக அரசு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:03 IST)
கொரோனா காலத்தில் முக்கிய பணியாற்றிய மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 
 
கொரோனா காலத்தில் முன்கள பணியார்கள் பலர் நமக்காக போராடினர். இந்நிலையில் மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் போது இறந்த பலரின் உடலை இந்த மயான பணியாளர்களே பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர். எனவே இவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில்  மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
இதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் இனி முன்கள பணியாளர்களான மயாம பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும், பணி காலத்தில் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments