Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு.

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்:  தமிழக அரசு அறிவிப்பு.
, வெள்ளி, 21 மே 2021 (17:31 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களையும் ஸ்டெர்லைட் ஆலையின் சொத்துக்களையும் சேதப்படுத்தியது தவிர்த்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன உளைச்சல் மற்றும் காயமடைந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 குடும்பத்தினருக்கும் அரசு வேலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும் அந்த உத்தரவை இன்று முதல்வர் முக ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சி தகவல்!