Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (22:58 IST)
நாளை முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத் துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பஞ்சாயத்து சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது என்றும் தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments