Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (22:58 IST)
நாளை முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத் துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பஞ்சாயத்து சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது என்றும் தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments