Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இரண்டு நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:20 IST)
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களும் அந்த மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டின் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித் ஷா: ‘’ஒவைஸி சூரியன் மேற்கே உதிக்கிறது என்பார்”