Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மழை பாதிப்பு; யாருக்கு எவ்வளவு நிவாரணம்?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (12:28 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் மூழ்கியதுடன், வேளாண் நிலங்களும் சேதமடைந்தன.

இந்நிலையில் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மழை காரணமாக குடிசைகள் பகுதி அளவில் இடிந்திருந்தால் ரூ.4,100ம், முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.

அதுபோல வீடுகளுக்குள் நீர் புகுந்திருந்தால் ரூ.4,800-ம், கான்கிரீர் வீடுகள் இடிந்திருந்தால் ரூ.95 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments