கோவில்கள் 10 மணி வரை, திரையரங்கில் கூடுதல் காட்சி! – தமிழக அரசு அளித்த தளர்வுகள்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (09:22 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் அக்கட்டுப்பாடுகளில் பலர் சில கோரிக்கைகளை முன்வைத்ததால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகம் முழுவதும் கோவில்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என அளிக்கப்பட்ட நேரம் தற்போது இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழாக்கள் கொண்டாடவும் தடை தொடர்கிறது.

அதேபோல திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானால் முதல் 7 நாட்கள் மட்டும் கூடுதல் காட்சிகள் திரையிடப்படலாம் என்றும் அதேசமயம் அனைத்து காட்சிகளும் 50 சதவீத பார்வையாளர்களோடே நடக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுமக்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments