9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகள்! – குடிசை மாற்று வாரியம் பலே அறிவிப்பு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:44 IST)
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குடிசைமாற்று வாரிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில் குடியிருப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடி செலவில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கலில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments