Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகள்! – குடிசை மாற்று வாரியம் பலே அறிவிப்பு!

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகள்! – குடிசை மாற்று வாரியம் பலே அறிவிப்பு!
Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:44 IST)
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குடிசைமாற்று வாரிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில் குடியிருப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடி செலவில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கலில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments