Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜொமைட்டா, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (07:28 IST)
இந்தியா முழுதும் கடந்த 4 நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் காய்கறி, மளிகை மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு உணவகங்கள் மட்டும் இயங்கலாம் என்றும் அதுவும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களான ஜொமைட்டா, ஸ்விக்கி உள்பட ஒரு சில நிறுவனங்கள் தங்களுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி தர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் இதுவரை இந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தற்போது ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது
 
இதன்படி காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் உணவுகளை டெலிவரி செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தேவையான உணவுகளை பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments