Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கொள்கை சிறப்பான ஒன்று! – பட்டமளிப்பு விழாவில் ஆளுனர் பேச்சு!

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:49 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை மீது தமிழ்நாடு அரசுக்கு நிறைய முரண்பாடுகள் உள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையில் ஏற்புடைய சில அம்சங்களை மட்டுமே ஏற்போம் என தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி “மற்றவர்கள் சொல்வதை கேட்டு புதிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து அதிலுள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு மற்றும் மாற்றத்திற்கான கல்வியை அடிப்படையாக கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments