Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

Prasanth Karthick
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (16:43 IST)

தமிழ்நாடு அரசு பணிபுரியும் பெண்களுக்காக அமைத்த தோழி விடுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மேலும் 4 மாவட்டங்களில் புதிய விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.

 

சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது.

 

இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

அதை தொடர்ந்து மேலும் 6 இடங்களில் புதிய தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் 2 விடுதிகள் சென்னையிலும், 4 விடுதிகள் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் அமைய உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

65 வயது பெற்ற தாயை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்த மகன்.. தகாத உறவுக்கு தண்டனை என விளக்கம்..!

ராகுல் காந்தியின் ‘வாக்காளர் உரிமை’ யாத்திரை இன்று தொடக்கம்.. தேர்தல் ஆணையத்தை சந்திக்க மறுப்பு..!

தீபாவளி விடுமுறை ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்.. 20% தள்ளுபடி கட்டணம்..!

டீக்கடைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்.. 10 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. அனைவரும் கைது..!

ஏஐ வீடியோ மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments